என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வேதாரண்ம் அருகே தனிமைப்படுத்தப்பட்டிருந்த தொழிலதிபர் தப்பி ஓட்டம்

    வேதாரண்ம் அருகே கள்ளக்காதலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தொழிலதிபர் தப்பி ஓடியுள்ளார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மருத்துவ அவசரம் என காரில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி கள்ளக்காதலியை பார்க்க வந்தபோது தனிமைப்படுத்தப்பட்ட தொழிலதிபர் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து நேற்று அதிகாலை தப்பி ஓட்டம்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா (வயது 37)‌ தனது கணவரை பிரிந்த அமுதா மலேசிய நாட்டிற்கு உணவகத்திற்கு வேலைக்குச் சென்றார். அங்கு ஓட்டல் உரிமையாளர் அப்துல் அகமது மைதீன் (57) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அப்துல்லா அகமது மைதீன் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே அமுதா மலேசியாவிலிருந்து வந்து தலைஞாயிறில் உள்ள தனது வீட்டில் தங்கி உள்ளார்.

    இந்நிலையில் அப்துல் அகமது மைதீன் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு வந்துள்ளார். அவர் அமுதாவை பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து சொகுசு காரில் மருத்துவம் அவசரம் என போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு தலைஞாயிறு வந்து அமுதா வீட்டில் தங்கி உள்ளார். தகவலறிந்த சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை அமுதா வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அப்துல் அகமது மைதீன் போலி ஸ்டிக்கர் ஒட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அமுதா மற்றும் அப்துல்அகமது மைதீன் ஆகியோர் மலேசியாவிலிருந்து இங்கு சமீபத்தில் வந்ததையடுத்து அவர்களது ரத்த மாதிரி மற்றும் அமுதாவின் மகன், மகள் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என அமுதாவின் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வீட்டிலிருந்து யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    அப்துல் அகமது மைதீன் போலி ஸ்டிக்கர் ஒட்டி காரில் வந்ததையடுத்து அவர் அமுதா வீட்டிலிருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் அப்துல்லா அகமது மைதீன் அவரது காரிலேயே தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து சற்று தூரத்தில் காரை நிறுத்தி இருந்ததால் அதிகாலையில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அவரது கார் இல்லாததை கண்டு போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது அப்துல் அகமதுமைதீன் தப்பி ஓடியது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து தப்பியோடிய அப்துல் அகமது மைதினின் கார் சாலையோரம் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×