என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    வேலூரில் 200 கிலோ சிக்கன் பறிமுதல்

    வேலூரில் இன்று தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 200 கிலோ சிக்கனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக மீன் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை இந்த கடைகள் திறக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் சில இடங்களில் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்கின்றனர்.

    வேலூர் சேண்பாக்கத்தில் இன்று தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 200 கிலோ சிக்கனை வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×