என் மலர்
செய்திகள்

கலெக்டர் அருண்
கொரோனா பரிசோதனைக்கு மேலும் 7 பேர் அனுமதி- கலெக்டர் அருண் தகவல்
புதுவையில் கொரோனா பரிசோதனைக்கு மேலும் 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரானா அறிகுறியுடன் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 7 பேர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அவசர எண் 104க்கு நேற்று 65 அழைப்புகள் வந்தது இதில் 11 பேர் மனநல மருத்துவர், ஆலோசகரிடம் ஆலோசனை பெற்றனர் இதுவரை 1942 அழைப்புகள் வந்துள்ளன.
இவ்வாறு கலெக்டர் அருண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story






