search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ குழு பரிசோதனை
    X
    மருத்துவ குழு பரிசோதனை

    புதுவையில் 21 போலீசாருக்கு கொரோனா அறிகுறி - தனிமைப்படுத்தி மருத்துவ குழு பரிசோதனை

    புதுவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறையை சேர்ந்த 21 நபர்களுக்கு இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்ததால் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம், திருவண்டார்கோவிலை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது.

    இதனையடுத்து புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால் அரியாங்குப்பம், திருபுவனை போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரை பணியில் இருந்து விடுவித்து அவர்களின் வீடுகளில் தனிமையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், கொரோனா தொற்று பரவிய மண்டலத்தில் பணிபுரிந்த காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் அபாயம் உள்ளது.

    எனவே கீழ்கண்ட போலீசார் அனைவரும் பணியில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். அனைவரும் தங்கள் வீடுகளில் கட்டுப்பாட்டுடன் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த நாட்கள் அனைத்தும் பணி நாட்களாகவே கருதப்படும்.

    ஐ.ஆர்.பி.என். காவலர்களுக்கு எப்போதும் வழங்கப்படும் தொகை வழங்கப்படும். பணியிலிருந்து விடுவிக்கப்படும் காவலர்கள் விபரம்:-

    தெற்கு பகுதி இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், அறிவுசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், காவலர்கள் பெரியண்ணசாமி, ஜெகதீஷ், சுரேஷ், பாலமுருகன், தமிழ், வரதராஜன், முருகன், சரவணன், மேற்கு பகுதி பாண்டியன், தனஞ்செயம், சுபாஷ், ரங்கராஜ், விஜயன், சர்வேசன், பன்னீர்செல்வம், கார்த்திகேயன், சத்தியராஜ், பெருமாள் என மொத்தம் 21 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×