search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருபுவனையில் ஓய்வு பெற்ற கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

    திருபுவனையில் ஓய்வு பெற்ற கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    திருபுவனை பேங்க் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 62). இவர் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

    இவரது மனைவி வள்ளியம்மை (56). இவர் அதே அலுவலகத்தில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இளங்கோவன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற் கொள்ளப்பட்டது.

    ஆனாலும் மூட்டு வலி காரணமாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதுபற்றி அவர் அடிக்கடி மனைவியிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு அவரது மனைவி ஆறுதல் கூறி வந்தார்.

    இந்த நிலையில் விரக்தியில் இருந்து வந்த இளங்கோவன் நேற்று மதியம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் உள்ள ஸ்டோர் ரூமில் உள்புறமாக பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தொங்கினார்.

    வெகு நேரமாக ஸ்டோர் ரூம் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த வள்ளியம்மை ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இளங்கோவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுவை ஆலங்குப்பம் சஞ்சீவி நகர் வீரப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனி (60). வீட்டில் உள்ள ஆடு, மாடுகளை மேய்த்து வந்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிப்பழக்கத்தை நிறுத்த பழனி சிகிச்சை பெற்றார். இதனால் இவருக்கு உடல் பலவீனமானது. இதனால் பழனி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை பழனிக்கும், அவரது மனைவி சுமதிக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஏற்கனவே மன வருத்தத்தில் இருந்து வந்த பழனி மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள குளத்தின் அருகே உள்ள வேப்ப மரத்தில் கேபிள் வயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மகன் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×