என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் முன்னாள் படைவீரர் அலுவலக பெண் ஊழியர் மர்ம மரணம்
Byமாலை மலர்20 March 2020 10:35 AM GMT (Updated: 20 March 2020 10:35 AM GMT)
வேலூரில் முன்னாள் படைவீரர் அலுவலக பெண் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை கந்தசாமி ஜமீன்தார் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி தமிழரசி (வயது 38). கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். குழந்தைகள் இல்லை. வேலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி வேலை முடிந்து தமிழரசி வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று அலுவலகத்தில் இருந்து அவருக்கு போன் செய்தனர். அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அலுவலக ஊழியர்கள் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள கட்டிலில் தமிழரசி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் கொசப்பேட்டை கந்தசாமி ஜமீன்தார் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி தமிழரசி (வயது 38). கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். குழந்தைகள் இல்லை. வேலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி வேலை முடிந்து தமிழரசி வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று அலுவலகத்தில் இருந்து அவருக்கு போன் செய்தனர். அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அலுவலக ஊழியர்கள் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள கட்டிலில் தமிழரசி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X