என் மலர்
செய்திகள்

வெள்ளரிக்காய்
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாகை மாவட்டத்தில் வெள்ளரிக்காய் விலை கடும் வீழ்ச்சி
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாகை மாவட்டத்தில் வெள்ளரிக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாமல் விவசாயிகள் தவிப்பு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தின் தெற்குப்பொய்கைநல்லூர் , வடக்கு பொய்கைநல்லூர்,பரவை, பூவைத்தேடி, காமேஷ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரன் இருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் பராமரிப்பு செலவு குறைவு. நான்கு மாத பயிரான இது பிப்ரவரி மாதம் பயிரிபடும் 2 மாதங்களில் மகசூல் தரும் வெள்ளரி தற்பொழுது சீசன் தொடங்கி உள்ளதால் பரவை சந்தையில் இருந்து கோயம்பேடு, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
ஆனால் தற்போது நிலவும் கொரோனோ வைரஸ் பாதிப்பால் மற்ற மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய்க்கு விலை போன வெள்ளரிக் காய்கள் தற்போது 20 ரூபாய்க்கு மட்டுமே விற்க்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Next Story






