என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெட்டப்பாக்கம் அருகே மலட்டாற்றில் மணல் கடத்திய ஜே.சி.பி., டிப்பர் லாரி பறிமுதல்
Byமாலை மலர்13 March 2020 9:29 AM GMT (Updated: 13 March 2020 9:29 AM GMT)
நெட்டப்பாக்கம் அருகே மலட்டாற்றில் மணல் கடத்திய ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று இரவு நெட்டப்பாக்கம் அருகே ஏரிக்கரை காலனி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது ரெங்கா ரெட்டிப்பாளையம் மலட்டாற்றில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு இருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்தும், ஜே.சி.பி. எந்திரம் மற்றும் டிப்பர் லாரி யாருக்கு சொந்தமானது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X