என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை வியாபாரியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
Byமாலை மலர்10 March 2020 2:13 PM GMT (Updated: 10 March 2020 2:13 PM GMT)
தஞ்சை வியாபாரியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்:
தஞ்சாவூரில் மளிகை கடை நடத்தி வருபவர் பரணிதரன். இவர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள மளிகை கடைகளுக்கு சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாகனம் மூலம் வினியோகம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் பரணிதரன் வினியோகம் செய்யும் எண்ணெய் தரமற்று இருப்பதாக கூறி திருமானூர் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அழகுவேல்(வயது 45) சில மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றை பதிந்துள்ளார். அந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என பரணிதரனிடம் அழகுவேல் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பரணிதரன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை அணுகியுள்ளார். இதனையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று பரணிதரன், திருமானூர்-திருச்சி சாலையில் ஒரு இடத்தில் வைத்து அழகுவேலிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அழகுவேலை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை திருமானூர் மின்சார வாரிய அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X