என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு பரிசீலனை- முதல்வர் உறுதி

    மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    நாகை:

    நாகை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். 

    காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன. 
    Next Story
    ×