என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
நாகை அரசு மருத்துவமனையில் கொரோனா காய்ச்சலுக்கு தனிவார்டு
நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாடு முழுவதும் கோவிட்-19 (கொரனோ) காய்ச்சல் பாதிப்புக்கான அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுகு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு அல்லது அறிகுறிகள் இருப்பவர்களை கண்காணிப்பதற்கான சிறப்பு வார்டு நேற்று திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் தனியாக உள்ள ஒரு கட்டிடத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 2 படுக்கைகளுடன் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் குடிநீர், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளுடன், நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு தேவையான கையுறைகள், கைகழுவும் திரவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறியதாவது:-
கோவிட்-19 காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் நாகை அரசு தலைமை மருத்துவனையில் தயாராக உள்ளன.
கோவிட்-19 காய்ச்சல் அறிகுறியுடன் இருப்பவர்களை தனிமைப்படுத்தி, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் செல்வதற்கு தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோவிட்-19 காய்ச்சல் குறித்து எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், மாவட்ட அரசு மருத்துவமனை அல்லது அந்தந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
மேலும், கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு மருந்தகம் போன்ற இடங்களில் ஊசி போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
நாடு முழுவதும் கோவிட்-19 (கொரனோ) காய்ச்சல் பாதிப்புக்கான அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுகு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு அல்லது அறிகுறிகள் இருப்பவர்களை கண்காணிப்பதற்கான சிறப்பு வார்டு நேற்று திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் தனியாக உள்ள ஒரு கட்டிடத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 2 படுக்கைகளுடன் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் குடிநீர், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளுடன், நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு தேவையான கையுறைகள், கைகழுவும் திரவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறியதாவது:-
கோவிட்-19 காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் நாகை அரசு தலைமை மருத்துவனையில் தயாராக உள்ளன.
கோவிட்-19 காய்ச்சல் அறிகுறியுடன் இருப்பவர்களை தனிமைப்படுத்தி, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் செல்வதற்கு தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோவிட்-19 காய்ச்சல் குறித்து எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், மாவட்ட அரசு மருத்துவமனை அல்லது அந்தந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
மேலும், கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு மருந்தகம் போன்ற இடங்களில் ஊசி போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
Next Story






