என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாங்கண்ணி அருகே திருட்டுபோன அம்மன் சிலை மீட்பு- வாலிபர் கைது
Byமாலை மலர்5 March 2020 4:41 PM GMT (Updated: 5 March 2020 4:41 PM GMT)
வேளாங்கண்ணி அருகே திருட்டுபோன அம்மன் சிலையை மீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சின்னத்தும்பூரில் தனியாருக்கு சொந்தமான செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த கோவிலில் உள்ள மாரியம்மன் சிலை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிசென்று விட்டனர்.
இதுகுறித்து நாகப்பட்டினம் பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த ராகவன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ், டி.ஐ.ஜி.லோகநாதன் ஆகியோரின் உத்தரவின்பேரில், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் ஆலோசனைப்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக வேதாரண்யம் மறைஞான் நல்லூர் பகுதியை சேர்ந்த சந்திரவேல் மகன் உதயராஜன் (வயது 30) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் அம்மன் சிலையை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து, 2 அடி உயரமுள்ள வெண்கல அம்மன் சிலை, குத்துவிளக்குகள் 5, செம்புகள் 6, கவரிங் ஆரம் 2 ஆகியவற்றை பறி முதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X