என் மலர்
செய்திகள்

மணல் கடத்தல்
ஆந்திராவில் இருந்து வேலூருக்கு மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்
ஆந்திராவில் இருந்து வேலூருக்கு மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் இருந்து வடமாநில லாரிகள் மூலம் வேலூருக்கு மணல் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்றிரவு பாகாயம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சரக்கு வாகனம் போல் தார்பாய் போட்டு மூடியபடி வந்த வடமாநில லாரியை மடக்கி சோதனையிட்டனர்.
அதில் ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
அதனை பாகாயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






