என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்27 Feb 2020 10:22 AM GMT (Updated: 27 Feb 2020 10:22 AM GMT)
குடியாத்தம் அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த பரதராமி ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் டெல்லிகுமார் (28). ஆந்திர மாநிலம் பங்காரு பாளையம் அடுத்த ராகிமான பெண்டாவை சேர்ந்த ரவி மகள் விஜயகுமாரி (24).
டெல்லி குமாருக்கும், விஜயகுமாரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த விஜயகுமாரி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை கண்ட அவரது உறவினர்கள் விஜயகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் டி.எஸ்.பி. சரவணன், பரதராமி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
குடியாத்தம் அடுத்த பரதராமி ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் டெல்லிகுமார் (28). ஆந்திர மாநிலம் பங்காரு பாளையம் அடுத்த ராகிமான பெண்டாவை சேர்ந்த ரவி மகள் விஜயகுமாரி (24).
டெல்லி குமாருக்கும், விஜயகுமாரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த விஜயகுமாரி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை கண்ட அவரது உறவினர்கள் விஜயகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் டி.எஸ்.பி. சரவணன், பரதராமி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X