search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேதாரண்யம் அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவர் கைது

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு அண்ணாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி சகுந்தலா (வயது 34). இவரது தங்கை நந்தினியை அதே ஊரைச் சேர்ந்த காமராஜ் (35) என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறி தகராறு செய்துள்ளார்.

    இதை பார்த்த சகுந்தலா தட்டிக்கேட்டபோது காமராஜ் சகுந்தலாவை தரக்குறைவாக பேசி மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து சகுந்தலா வாய்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.
    Next Story
    ×