search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாலையூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

    நாகை மாவட்டம் பாலையூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் பாலையூர் காவல் சரகம் திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வாலிபருடன் திருமணம் நடைபெற்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    அந்த இளம்பெண் திருமங்கலத்தில் வசித்தபோது அதே பகுதியை சேர்ந்த வினோத் (வயது 32) என்பவருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் வினோத் தன்னிடமுள்ள போட்டோக்களை காட்டி இளம்பெண்ணை தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள உடன்படும்படி அடிக்கடி போனில் மிரட்டியுள்ளார். இதுகுறித்து இளம்பெண் பாலையூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×