என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருந்துறை அருகே கிரேன் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்21 Feb 2020 9:43 AM GMT (Updated: 21 Feb 2020 9:43 AM GMT)
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிரேன் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் ரோடு, எல்லப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி(58). விவசாயியான இவர் தனது வீட்டில் இருந்து அந்த பகுதியில் தினமும் மாலை வேளையில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று மாலை 7 மணிக்கு வழக்கம் போல் நல்லசாமி பெத்தாம்பாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக நல்லசாமியின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த நல்லசாமியின் தலைமீது கிரேன் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வழக்கு பதிவுசெய்த பெருந்துறை போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன நல்லசாமிக்கு சரஸ்வதி என்ற மனைவியும், தர்சன் என்ற மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் ரோடு, எல்லப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி(58). விவசாயியான இவர் தனது வீட்டில் இருந்து அந்த பகுதியில் தினமும் மாலை வேளையில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று மாலை 7 மணிக்கு வழக்கம் போல் நல்லசாமி பெத்தாம்பாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக நல்லசாமியின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த நல்லசாமியின் தலைமீது கிரேன் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வழக்கு பதிவுசெய்த பெருந்துறை போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன நல்லசாமிக்கு சரஸ்வதி என்ற மனைவியும், தர்சன் என்ற மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X