என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மந்தாரக்குப்பத்தில் வியாபாரிகள் கடைகள் அடைப்பு
Byமாலை மலர்17 Feb 2020 11:57 AM GMT (Updated: 17 Feb 2020 11:57 AM GMT)
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம்:
சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி போராட்டம் செய்தனர். அப்போது அவர்கள் சாலை மறியல் செய்ய முயற்சித்த போது போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்தசம்பவம் தமிழக முழுவதும் எதிரொலித்தது. போலீஸ் தடியடி சம்பவத்தை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது.
முஸ்லிம்களுக்கு ஆதரவாக தி.மு.க. கூட்டணி கட்சியினரும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதேபோல் வியாபார சங்கத்தினரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் வியாபாரிகள் சங்கத்தினர், தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று (17-ந் தேதி) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று வியாபாரிகள் மந்தாரக்குப்பத்தில் கடையடைப்பு போராட்டம் செய்தனர். பெரியாக்குறிச்சியில் இருந்து மந்தாரக்குப்பம் வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் முழுவதும் இன்று மூடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
மந்தாரக்குப்பத்தில் உள்ள ஜெயப்ரியா பஸ் நிறுத்தம் பகுதியில் இன்று முஸ்லிம் அமைப்பினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்களும் பங்கேற்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி போராட்டம் செய்தனர். அப்போது அவர்கள் சாலை மறியல் செய்ய முயற்சித்த போது போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்தசம்பவம் தமிழக முழுவதும் எதிரொலித்தது. போலீஸ் தடியடி சம்பவத்தை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது.
முஸ்லிம்களுக்கு ஆதரவாக தி.மு.க. கூட்டணி கட்சியினரும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதேபோல் வியாபார சங்கத்தினரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் வியாபாரிகள் சங்கத்தினர், தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று (17-ந் தேதி) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று வியாபாரிகள் மந்தாரக்குப்பத்தில் கடையடைப்பு போராட்டம் செய்தனர். பெரியாக்குறிச்சியில் இருந்து மந்தாரக்குப்பம் வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் முழுவதும் இன்று மூடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
மந்தாரக்குப்பத்தில் உள்ள ஜெயப்ரியா பஸ் நிறுத்தம் பகுதியில் இன்று முஸ்லிம் அமைப்பினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்களும் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X