search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேலூர் அருகே குடிக்க பணம் தராததால் தொழிலாளி தற்கொலை

    வேலூர் அருகே குடிக்க பணம் தராததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் சலவன் பேட்டை அம்மனாங்குட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 39). விவசாய பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளி.இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கோபால் அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் தராததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த கோபால் பூச்சி மருந்தை குடித்தார். இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

    இதனை கண்டு திடுக்கிட்ட அவரது மனைவி அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கோபால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×