search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    ஆர்எஸ் மாத்தூர் பகுதியில் 2 பெண்கள் மாயம்

    ஆர்.எஸ். மாத்தூர் பகுதியில் 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறைஅருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகள் தமிழரசி (வயது 18). இவர் தத்தனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற தமிழரசி அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து காசிநாதன் செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதேபோல் பொய்யாத நல்லூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி ரஞ்சிதா (வயது 24) என்பவர் வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். 

    இது குறித்த புகார்களின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரும் கடத்தப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×