search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து (கோப்புப்படம்)
    X
    விபத்து (கோப்புப்படம்)

    பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 3 வயது குழந்தை பலி

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
    பெருந்துறை:

    பெருந்துறை காந்தி கோவில் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் என்கிற பிரவீன் (வயது30).

    நேற்று இரவு 8.30 மணிக்கு இவர் தனது நண்பர் கணேஷ் என்பவரின் மனைவி சாலம்மாள்(25) மற்றும் சாலம்மாளின் குழந்தைகள் முகுந்த்(5), ஹேமந்த்(3) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    பாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்ட முன்னால் 3 வயது சிறுவன் ஹேமந்த் அமர்ந்திருந்தான். பின்னால் சாலம்மாள், முகுந்த் அமர்ந்து வந்தனர்.

    பெருந்துறை அருகே பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் வந்த போது எதிரே விவேக்(25) என்ற வாலிபர் பெங்களூரிலிருந்து கோவை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இதில் அனைவரும் கீழே விழுந்து துடித்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதில் மேல் சிகிச்சைக்காக குழந்தை ஹேமந்தை கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தான்.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×