என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
ஈரோட்டில் ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 பேர் கைது
ஈரோடு அருகே ஓடும் பேருந்தில் பயணியிடம் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் சுப்பையா வீதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது46). நேற்று கருப்பையா ஈரோடு பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார்.
பஸ் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது கருப்பையா பின்னால் நின்ற மர்ம நபர்கள் இருவர் திடீரென அவர் பாக்கெட்டில் இருந்த ஆயிரம் பணத்தை திருடி கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பையா திருடன்..திருடன் என கத்தினார்.
பஸ்சில் இருந்த பயணிகள் அந்த நபர்களை மடக்கிபிடித்து கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கருணைநாதன்(25), பூபதி(28) என தெரிய வந்தது.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு கருங்கல்பாளையம் சுப்பையா வீதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது46). நேற்று கருப்பையா ஈரோடு பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார்.
பஸ் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது கருப்பையா பின்னால் நின்ற மர்ம நபர்கள் இருவர் திடீரென அவர் பாக்கெட்டில் இருந்த ஆயிரம் பணத்தை திருடி கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பையா திருடன்..திருடன் என கத்தினார்.
பஸ்சில் இருந்த பயணிகள் அந்த நபர்களை மடக்கிபிடித்து கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கருணைநாதன்(25), பூபதி(28) என தெரிய வந்தது.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






