என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பவானி ஆற்றில் குளித்த தனியார் நிறுவன ஊழியர் பலி
பவானி:
பெங்களூர், எண்ணூர், கல்யாண் நகர் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன் மகன் ஷாம்பிரகாஷ் (வயது 21) தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர் நண்பர்கள் ஜாபர், டேனியல், சுராஜ் 4 பேருடன் பெங்களூரில் இருந்து வால்பாறை செல்வதற்காக 2 பைக்கில் வந்து உள்ளார்கள்.
பவானி, லட்சுமி நகர் சேலம்-கோவை தேசிய நெடுஞ் சாலை காவிரி ஆற்றில் புது பாலம் கீழ் குளிப்பதற்கு இறங்கிய போது ஷாம்பிரகாஷ் கால் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் ஷாம் பிரகாஷை கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது அதிகமாக தண்ணீர் குடித்ததினால் மயக்கமாக இருந்தார். பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்