search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலி
    X
    பலி

    பவானி ஆற்றில் குளித்த தனியார் நிறுவன ஊழியர் பலி

    நண்பர்களுடன் பவானி ஆற்றில் குளித்த தனியார் நிறுவன ஊழியர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பவானி:

    பெங்களூர், எண்ணூர், கல்யாண் நகர் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன் மகன் ஷாம்பிரகாஷ் (வயது 21) தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவர் நண்பர்கள் ஜாபர், டேனியல், சுராஜ் 4 பேருடன் பெங்களூரில் இருந்து வால்பாறை செல்வதற்காக 2 பைக்கில் வந்து உள்ளார்கள்.

    பவானி, லட்சுமி நகர் சேலம்-கோவை தேசிய நெடுஞ் சாலை காவிரி ஆற்றில் புது பாலம் கீழ் குளிப்பதற்கு இறங்கிய போது ஷாம்பிரகாஷ் கால் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

    அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் ஷாம் பிரகாஷை கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது அதிகமாக தண்ணீர் குடித்ததினால் மயக்கமாக இருந்தார். பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×