என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பெண் டாக்டரிடம் பாலியல் தொல்லை- வாலிபர் கைது

    சென்னை சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பெண் டாக்டரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    தாம்பரம்:

    கண்டோன்மென்ட் பல்லாவரம் இரண்டாவது பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் சீதா (வயது 36) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

    சென்னை சேத்துப்பட்டில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளராக பணி செய்து வருகிறார். நேற்று மாலை பணிமுடிந்து தனது மோட்டார் பைக்கில் வீட்டுக்கு செல்வதற்காக பல்லாவரம் கார்டன் சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மருத்துவரிடம் அவதூறாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இதுகுறித்து மருத்துவர் கீதா கொடுத்த புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திரிசூலத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது 38) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×