search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வள்ளலார் நினைவு தினத்தையொட்டி டாஸ்மாக் கடை, பார்களுக்கு நாளை விடுமுறை

    வள்ளலார் நினைவு தினமான நாளை வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளையொட்டி உள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் ஆகியவை அனைத்திற்கும் வள்ளலார் நினைவு தினமான நாளை சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் நாளை மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது.

    இதனை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல் மதுபான பார்கள், ஓட்டல்களில் உள்ள பார்களில் விற்பனை செய்தால் மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்கள் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு, மது கூட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×