என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 மகள்கள் பாலியல் பலாத்காரம்- தந்தைக்கு 40 ஆண்டு ஜெயில் தண்டனை
Byமாலை மலர்7 Feb 2020 7:47 AM GMT (Updated: 7 Feb 2020 9:29 AM GMT)
பெருந்துறையில் 2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 40 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு:
பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (வயது 48) கட்டிட தொழிலாளி. இவருடைய இரண்டாவது மனைவிக்கு 7 வயது மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2016-ல் இரண்டு பெண் குழந்தைகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக இவரின் இரண்டாவது மனைவி மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்தனர். மகளிர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஈரோடு மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-
பாதிக்கப்பட்ட 2 பெண் குழந்தைகளுக்கும் நிவாரண நிதியாக தமிழக அரசு தலா 2 லட்சம் வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது குற்றங்கள் நிருபிக்கப்பட்டதால் தலா 20 வருடம் ஏககாலத்தில் மொத்தம் 40 வருடம் சிறை தண்டனை வழங்கியும் மேலும் தலா 5,000 வீதம் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை செலுத்த வேண்டும். தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுப்பிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் சுமதி ஆஜரானார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X