search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை இடிக்கும் பணி இன்று தொடங்கியது.
    X
    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை இடிக்கும் பணி இன்று தொடங்கியது.

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் இடிக்கும் பணி தொடங்கியது

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் இடிக்கும் பணி இன்று தொடங்கியது. ஓட்டல் இருந்த இடத்தில் மேற்கூரைகளை அகற்றி இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.45 கோடி செலவில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்து கட்டப்பட உள்ளது. பஸ் நிலையம் கட்டுமானப்பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வர குறைந்தபட்சம் 24 மாதங்கள் ஆகும் என்று மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.

    அதனால் வருகிற 9-ந்தேதி முதல் பஸ்கள் தற்காலிக இடமாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இப்போது புதிய பஸ் நிலையத்தின் கிழக்குப்பகுதியில் சென்னை மற்றும் திருப்பத்தூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி இறக்கி செல்லவும், பிற மார்க்கங்களில் செல்லும் பஸ்கள் எல்லாம் வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இயங்கிவரும் 35-க்கும் அதிகமான கடைகள் காலி செய்யப்பட்டுள்ளன.

    கடைகள் முன்பு உள்ள இடத்தில் தற்போது வியாபாரம் செய்து வருகின்றனர். பஸ் நிலையத்தில் நுழைவு வாயில் அருகே உள்ள ஓட்டல் காலி செய்யப்பட்டது.

    இதற்காக இப்போது இயங்கிவரும் புதிய பஸ்நிலைய விரிவாக்கத்திற்காக கட்டிடங்கள் இடிக்கும் பணி இன்று தொடங்கியது. ஓட்டல் இருந்த இடத்தில் இன்று மேற்கூரைகளை அகற்றி இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    செல்லியம்மன் கோவில் பின்புறம் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. அதில் இன்று தார் சாலை போடும்பணி நடந்தது.

    இந்த இடத்தில் இருந்து 9-ந்தேதி முதல் சென்னை, பெங்களூர், திருப்பத்தூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    Next Story
    ×