search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காஞ்சீபுரத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷம்- 2 பெண்கள் கைது

    காஞ்சீபுரத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கோஷமிட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
    காஞ்சீபுரம்:

    குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாடு முழுவதும் போராட்டங்களும் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சீபுரத்தில் குடியுரிமை திருத்த சட்டம்., தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கோஷமிட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சீபுரம் ரெயில் நிலையம் அருகே உள்ள சுவர்களில் மத்திய அரசின் குடியுரிமை சடடம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பெயிண்டிங் செய்து, 2 பெண்கள் விளம்பரம் செய்தனர்.

    மேலும் அதனை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வினியோகித்து கோஷமிட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்து வந்து அவர்களை மேலும் சுவர் விளம்பரம் செய்யவிடாமல் தடுத்தனர். மேலும் 2 பெண்களையும் கைது  செய்தனர். கைதான பெண்கள் பற்றிய விபரத்தை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.  விசாரணைக்கு பிறகு அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×