search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சித்தோடு அருகே தடுப்புச் சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    சித்தோட்டில் ரோட்டின் தடுப்புச்சுவர் மீது மோதிய வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
    சித்தோடு:

    சேலம் மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் வசிக்கும் பூபதி மகன் ஜெகதீஷ் (வயது 27). இவர் சித்தோட்டில் உள்ள ஒரு தனியார் சாயப்பட்டறை யில் பணியாற்றி வந்துள்ளார்.

    நேற்று காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சித்தோடு வெள்ளம் மண்டி அருகே ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஜெகதீஷ் நிலைதடுமாறி ரோட்டின் தடுப்புச் சுவர் மீது மோதினார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காயமடைந்த அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    Next Story
    ×