என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சித்தோடு அருகே தடுப்புச் சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்29 Jan 2020 12:23 PM GMT (Updated: 29 Jan 2020 12:23 PM GMT)
சித்தோட்டில் ரோட்டின் தடுப்புச்சுவர் மீது மோதிய வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
சித்தோடு:
சேலம் மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் வசிக்கும் பூபதி மகன் ஜெகதீஷ் (வயது 27). இவர் சித்தோட்டில் உள்ள ஒரு தனியார் சாயப்பட்டறை யில் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சித்தோடு வெள்ளம் மண்டி அருகே ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஜெகதீஷ் நிலைதடுமாறி ரோட்டின் தடுப்புச் சுவர் மீது மோதினார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காயமடைந்த அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சேலம் மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் வசிக்கும் பூபதி மகன் ஜெகதீஷ் (வயது 27). இவர் சித்தோட்டில் உள்ள ஒரு தனியார் சாயப்பட்டறை யில் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சித்தோடு வெள்ளம் மண்டி அருகே ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஜெகதீஷ் நிலைதடுமாறி ரோட்டின் தடுப்புச் சுவர் மீது மோதினார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காயமடைந்த அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X