search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பாலவாக்கத்தில் அலுவலகத்தில் மேலாளர் தற்கொலை

    பாலவாக்கத்தில் அலுவலகத்தில் மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வந்தவர் கமலக் கண்ணன் (வயது 40). பாலவாக்கம் பகுதியில் ஆட்களை வெளி நாட்டிற்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தில் முதன்மை மேலாளராக பணி புரிந்து வந்தார்.

    இவர் கடந்த 3 நாட்களாக அலுவலகத்துக்கு விடுமுறை அளித்து இருந்தார். ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் வந்த போது பூட்டி இருந்ததால் முதன்மை மேலாளர் கமலக்கண்ணனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது அலுவலகத்தில் உள்ளே இருந்து போனின் சத்தம் வந்தது. இதுபற்றி உழியர்கள் நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அலுவலக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கமலக்கண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பது தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×