search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மயிலாடுதுறை அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்

    மயிலாடுதுறை அருகே பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர் மீது போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் குணநலபாடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ரூபன். இவர் தனியார் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை பின்தொடர்ந்து பேச்சு கொடுப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது. அந்த மாணவி. குத்தாலம் அருகே உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று வருகின்றேன் என சென்ற மாணவி அதன் பின்னர் திரம்பவில்லை.

    இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாணவியை ரூபன் கடத்தி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதனால் ரூபன் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×