search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பாதிப்பு

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த சுகாதார துறையும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காங்கயத்தை சேர்ந்த 6 வயது சிறுமி, இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, தென்னம்பாளையம் 10 வயது சிறுவன், முதலி பாளையம் 12 வயது சிறுமி என 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×