என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானி அருகே புதிய காரில் பயணம் செய்த வாலிபர் பலி
Byமாலை மலர்9 Jan 2020 11:41 AM GMT (Updated: 9 Jan 2020 11:41 AM GMT)
பவானி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோனேரிபட்டி பூமணி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் துரைசாமி (வயது 35) பைக் மெக்கானிக்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு துரைசாமி புதிய கார் வாங்கி இருந்தார். நேற்று மாலை காரில் பவானி வந்த துரைசாமி பிறகு அங்கிருந்து மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதிய கார் என்பதால் காரில் எண் இல்லை.
இந்த கார் பவானி அருகே உள்ள மாணிக்கம்பாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஒரு லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் கார் நொறுங்கியது. வாலிபர் துரைசாமி இடிபாட்டுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பவானி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான துரைசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோனேரிபட்டி பூமணி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் துரைசாமி (வயது 35) பைக் மெக்கானிக்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு துரைசாமி புதிய கார் வாங்கி இருந்தார். நேற்று மாலை காரில் பவானி வந்த துரைசாமி பிறகு அங்கிருந்து மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதிய கார் என்பதால் காரில் எண் இல்லை.
இந்த கார் பவானி அருகே உள்ள மாணிக்கம்பாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஒரு லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் கார் நொறுங்கியது. வாலிபர் துரைசாமி இடிபாட்டுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பவானி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான துரைசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X