search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேதாரண்யத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

    வேதாரண்யத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரம் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவரது மகன் சபரி என்கிற சபரிநாதன். இவர் மீது வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதில் அவர் ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் பரிந்துரையின் பேரில் நாகை மாவட்ட கலெக்டர் பிரவின் பி. நாயர் உத்தரவின் பேரில் சபரிநாதனை தடுப்பு காவல் சட்டத்தில் காவலில் வைக்க (குண்டர் சட்டத்தில்) உத்தரவிட்டார். அந்த உத்தரவை வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுபாஷ் சந்திரபோஸ் போலீசாருடன் சென்று திருச்சி மத்திய சிறையில் சபரிநாதனிடம் வழங்கினார்.

    Next Story
    ×