என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம்
Byமாலை மலர்9 Jan 2020 10:38 AM GMT (Updated: 9 Jan 2020 10:38 AM GMT)
வேதாரணயம் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சியின் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தாணிக்கோட்டகம் கடை தெருவில் மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார சீரழிவு கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சியின் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு விவசாய மாநில செயலாளர் சாமி.நடராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கோவிசுப்பிரமணியன் விவசாய தொழிலாளர் சங்க மாநிலக் குழு வெற்றியழகன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள் விவசாய சங்க ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தலைஞாயிறு ஒன்றியம் ஆலங்குடியில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வேணு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தாணிக்கோட்டகம் மற்றும் ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 73 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யம் தாலுக்கா தாணிக்கோட்டகம் கடை தெருவில் மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார சீரழிவு கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சியின் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு விவசாய மாநில செயலாளர் சாமி.நடராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கோவிசுப்பிரமணியன் விவசாய தொழிலாளர் சங்க மாநிலக் குழு வெற்றியழகன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள் விவசாய சங்க ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தலைஞாயிறு ஒன்றியம் ஆலங்குடியில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வேணு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தாணிக்கோட்டகம் மற்றும் ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 73 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X