search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஈரோடு அருகே மளிகை கடைக்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    ஈரோடு அருகே தொடர் நஷ்டம் ஏற்பட்டதால் மளிகை கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு கவுண்டிச்சிபாளையம் அடுத்த சேனாதிபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 54). மளிகைக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் பூபதியால் மளிகை கடை நடத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் ஈரோட்டில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீட்டில் படுத்திருந்த பூபதி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூபதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×