search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    அரியலூர் அருகே வீட்டு கதவு உடைத்து 20 பவுன் நகை- ரூ.2 லட்சம் கொள்ளை

    அரியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது55). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வாசுகி , மகள் ரோஜா. சம்பவத்தன்று சிதம்பரத்திலுள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் வாசுகிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் உறவினர் மூலம் அரியலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

    இதையடுத்து அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் 20 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க மர்மநபர்கள் மிளகாய் பொடியை வீட்டில் தூவி விட்டு சென்றுள்ளனர். 

    கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×