என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு பஸ்கள்.
    X
    சிறப்பு பஸ்கள்.

    வேலூர் மண்டலத்தில் இருந்து சிதம்பரத்துக்கு சிறப்பு பஸ்கள்

    வேலூர் மண்டலத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிதம்பரத்துக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    வாணியம்பாடி:

    சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றுவருகிறது. பொதுமக்களின் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதி 2 நாட்களுக்கு தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளது.

    குறிப்பாக  வேலூர் மண்டலத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிதம்பரத்துக்கு செல்ல பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு பஸ்கள் மக்களின் வசதிக்காக இயக்கப்படுவதால் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×