search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    மோட்டார் சைக்கிள்கள் மோதல் - தனியார் ஆலை ஊழியர் பலி

    மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் தனியார் சிமெண்டு ஆலை ஊழியர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாரதிராஜா (வயது 20). ஐ.டி.ஐ. படித்துள்ள பாரதிராஜா, அதே பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலையை முடித்து கொண்டு பாரதிராஜா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அரியலூர்-செந்துறை சாலையில் சென்ற போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், பாரதிராஜா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின.

    இதில் படுகாயம் அடைந்த பாரதிராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மாக்காய்குளத்தை சேர்ந்த ஜானகிராமன், பின்னால் அமர்ந்து பயணம் செய்த பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கையை சேர்ந்த சக்தி ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×