என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்4 Jan 2020 10:18 AM GMT (Updated: 4 Jan 2020 10:18 AM GMT)
நீலகிரி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தாலும், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தாலும் பவானிசாகர் அணை 3 முறை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக கடந்த 1-ந் தேதி மீண்டும் முழு கொள்ளளவான 105 அடியை பவானிசாகர் அணை எட்டியது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 105 அடியில் உள்ளது. அணைக்கு 3597 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு 1100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஈரோடு திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தாலும், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தாலும் பவானிசாகர் அணை 3 முறை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக கடந்த 1-ந் தேதி மீண்டும் முழு கொள்ளளவான 105 அடியை பவானிசாகர் அணை எட்டியது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 105 அடியில் உள்ளது. அணைக்கு 3597 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு 1100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X