search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வேலூர் ஜெயில் கைதி திடீர் மரணம்

    வேலூர் ஜெயில் கைதி திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    தர்மபுரியை சேர்ந்தவர் கங்கப்பா (வயது 50). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனையடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கங்கப்பா இறந்தார்.

    இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×