search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்ப்பிணிக்கு வயல் வெளியில் பிரசவம் பார்த்த காட்சி.
    X
    கர்ப்பிணிக்கு வயல் வெளியில் பிரசவம் பார்த்த காட்சி.

    வயல்வெளியில் குழந்தை பெற்ற இளம்பெண்

    ஆம்பூர் அருகே 108 ஆம்புலன்சில் சென்ற போது பிரசவ வலி ஏற்பட்டதால் இளம்பெண்ணுக்கு வயல்வெளியில் குழந்தை பிறந்தது. அங்கு கூடியிருந்த கிராம பெண்கள் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள கீழ் மிட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 27), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சோனியா (23). இவர் 3-வதாக கர்ப்பமானார். இன்று காலை சோனியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை நரியம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ரகுநாதபுரம் வயல்வெளி நடுவே உள்ள சாலையில் ஆம்புலன்ஸ் சென்றபோது சோனியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்சை நடுவழியில் நிறுத்தினர்.

    அங்கு வயல் வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களை ஆம்புலன்ஸ் உதவியாளர் உதவிக்கு அழைத்தார்.

    கிராம பெண்கள் ஆம்புலன்சில் இருந்த சோனியாவை இறக்கி வயல்வெளியில் சேலையால் சுற்றி மறைத்துக் கொண்டனர். சோனியாவுக்கு பெண்கள் பிரசவம் பார்த்தனர். இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதனையடுத்து தாயும், குழந்தையும் நரியம்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×