என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவகோட்டை அருகே, தெப்பக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
Byமாலை மலர்31 Dec 2019 3:56 PM GMT (Updated: 31 Dec 2019 3:56 PM GMT)
தேவகோட்டை அருகே தெப்பக்குளத்தில் குளிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் ஆழமான பகுதியில் மூழ்கி பலியாயினர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் சந்துரு (வயது17). செக்காலையைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சுப்பிரமணியன் (17). இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.செக்காலையைச் சேர்ந்த ராம கிருஷ்ணன் மகன் லட்சுமணன் (17) மற்றொரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் 3 பேரும் சேர்ந்து தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் அங்குள்ள கோவில் தெப்பக்குளத்தில் 3 பேரும் குளித்தனர். அப்போது சந்துருவும், சுப்பிரமணியனும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமணன், சத்தம் போட்டுள்ளார்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் குளத்தில் குதித்து 2 பேரையும் தேடினர்.
இதில் அவர்கள் 2 பேரையும் பிணமாகவே மீட்க முடிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆறாவயல் போலீசார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 மாணவர்களின் உடல்களையும் பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் சந்துரு (வயது17). செக்காலையைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சுப்பிரமணியன் (17). இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.செக்காலையைச் சேர்ந்த ராம கிருஷ்ணன் மகன் லட்சுமணன் (17) மற்றொரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் 3 பேரும் சேர்ந்து தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் அங்குள்ள கோவில் தெப்பக்குளத்தில் 3 பேரும் குளித்தனர். அப்போது சந்துருவும், சுப்பிரமணியனும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமணன், சத்தம் போட்டுள்ளார்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் குளத்தில் குதித்து 2 பேரையும் தேடினர்.
இதில் அவர்கள் 2 பேரையும் பிணமாகவே மீட்க முடிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆறாவயல் போலீசார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 மாணவர்களின் உடல்களையும் பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X