என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம் அருகே ஆந்திர எல்லையில் காட்டு யானை பலி
Byமாலை மலர்31 Dec 2019 9:51 AM GMT (Updated: 31 Dec 2019 9:51 AM GMT)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆந்திர எல்லையில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள பரதராமி கொத்தூர் ரெட்டியார் பள்ளம் கிராமம் ஆந்திர எல்லையையொட்டி உள்ளது.
இந்த கிராமத்திலுள்ள விவசாய நிலத்தில் இன்று காலை ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதனை பார்த்த அந்த கிராமத்தினர் உடனடியாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக இரு மாநில வனத்துறை அலுவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வயது முதிர்ந்த நிலையில் நீளமான இரு தந்தங்களுடன் ஆண் யானை இறந்து கிடப்பது தெரியவந்தது.
மேலும், அந்த பகுதியில் மிகக்குறைந்த உயரத்தில் மின்சார கம்பி சென்றதால் மின்சாரம் தாக்கி யானை இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, ஆண் யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடு செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இரு மாநில வனத்துறை அலுவலர்களும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள பரதராமி கொத்தூர் ரெட்டியார் பள்ளம் கிராமம் ஆந்திர எல்லையையொட்டி உள்ளது.
இந்த கிராமத்திலுள்ள விவசாய நிலத்தில் இன்று காலை ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதனை பார்த்த அந்த கிராமத்தினர் உடனடியாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக இரு மாநில வனத்துறை அலுவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வயது முதிர்ந்த நிலையில் நீளமான இரு தந்தங்களுடன் ஆண் யானை இறந்து கிடப்பது தெரியவந்தது.
மேலும், அந்த பகுதியில் மிகக்குறைந்த உயரத்தில் மின்சார கம்பி சென்றதால் மின்சாரம் தாக்கி யானை இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, ஆண் யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடு செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இரு மாநில வனத்துறை அலுவலர்களும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X