என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இன்று 2-ம் கட்ட தேர்தல் - ஈரோடு மாவட்டத்தில் 4 பஞ்சாயத்து தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடந்ததில் 4 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-ம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    மாவட்டத்தில் இன்று 130 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 7 யூனியன்களில் தேர்தல் நடந்தது. இதில் 4 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள புதூர், அந்தியூர் யூனியனில் உள்ள பச்சாம்பாளையம், சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள கொடுமணல், பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள செல்லப்பம்பாளையம் ஆகிய 4 பஞ்சாயத்துகளின் தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த 4 பஞ்சாயத்து தலைவர்கள் நீங்கலாக 126 பஞ்சாயத்து தலைவர்களுக்கும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    Next Story
    ×