search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு (கோப்புப்படம்)
    X
    வாக்குப்பதிவு (கோப்புப்படம்)

    விராலிமலை ஒன்றியம் 15-வது வார்டில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு

    விராலிமலை ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் 30-ந்தேதி 2-ம்கட்ட தேர்தலின் போது மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சேகர் என்பவர் ஸ்பேனர் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் நேற்று நடந்த ஓட்டுப்பதிவின் போது அவருக்கு ஸ்பேனர் சின்னத்திற்கு பதில் ஸ்குரூ சின்னம் வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்தது. இது குறித்து சேகர் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான உமா மகேஸ்வரியிடம் புகார் செய்தார்.

    இதையடுத்து விராலிமலை ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் 30-ந்தேதி 2-ம்கட்ட தேர்தலின் போது மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

    இது குறித்து கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சின்னம் மாறியதன் காரணமாக விராலிமலை ஒன்றியம் 15-வது வார்டில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×