என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு (கோப்புப்படம்)
    X
    வாக்குப்பதிவு (கோப்புப்படம்)

    ஈரோட்டில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு- 3 லட்சத்து 79 ஆயிரத்து 319 பேர் ஓட்டு போடுகிறார்கள்

    ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் கட்டமாக 7 ஒன்றியங்களில் நடைபெறும் வாக்குப்பதிவில் மொத்தம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 218 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக வரும் 27 ,30 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 183 வார்டுகள், 225 கிராம ஊராட்சி தலைவர்கள், 2097 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 19 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன.

    இதில் முதல் கட்ட தேர்தல் ஈரோடு கோபி கொடுமுடி மொடக்குறிச்சி நம்பியூர் தாளவாடி டி. என். பாளையம் ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 894 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும், 95 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளும் 79 ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுகளுக்கும், 8 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும் நடைபெற உள்ளது.

    முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 657 ஓட்டுச்சாவடிகளில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட ஓட்டுப்பதிவு நாளில் தொடங்கும் நிலையில் அனைத்து பகுதியிலும் வீடு வீடாகச் சென்று அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் பூத் சிலிப் வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. சில வீடுகளில் பூத் சீலிப் பெற ஆட்கள் இல்லாத நிலையில் அவற்றை ஓட்டுச்சாவடியில் வைத்து அவர்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு ஒன்றியத்தில் 49 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன இதில் ஆண்கள் 15 ஆயிரத்து 938 பேரும் பெண்கள் 16, 651 பேரும் திருநங்கைகள் 5 பேர் என மொத்தம் 32 ஆயிரத்து 594 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    கோபி ஒன்றியங்களில் 144 வாக்குச்சாவடி மையங்களில் 38 ஆயிரத்து 766 ஆண்களும் 40 ஆயிரத்து 766 பெண்களும் ஒரு திருநங்கை என மொத்தம் 79 ஆயிரத்து 533 பேர் வாக்களிக்கவுள்ளனர். கொடுமுடி ஒன்றியங்களில் 52 வாக்குச்சாவடி மையங்களில் 12,510 ஆண்களும் 13 ஆயிரத்து 753 பெண்களும் இரண்டு திருநங்கைகள் என மொத்தம் 26 ஆயிரத்து 365 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

    மொடக்குறிச்சி ஒன்றியங்களில் 160 வாக்குச்சாவடி மையங்களில் 46,210 ஆண்களும் 48,980 பெண்களும், 19 திருநங்கைகளும் என மொத்தம் 95, 209 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    நம்பியூரில் 102 வாக்குச்சாவடி மையங்களில் 27 ஆயிரத்து 483 ஆண்களும், 28 ஆயிரத்து 710 பெண்களும் இரண்டு திருநங்கைகள் என மொத்தம் 56 ஆயிரத்து 195 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    தாளவாடியில் 75 வாக்குச்சாவடி மையங்களில் 23 ஆயிரத்து 919 ஆண்களும், 24 ஆயிரத்து 24 பெண்களும் என மொத்தம் 47 ஆயிரத்து 943 பேர் வாக்களிக்க உள்ளனர். டி.என்.பாளையத்தில் 75 வாக்குச்சாவடி மையங்களில் 20,116 ஆண்களும் 21 ,261 பெண்களும் இரண்டு திருநங்கைகள் என மொத்தம் 41 ஆயிரத்து 379 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    இவ்வாறாக நாளை முதல் கட்டமாக 7 ஒன்றியங்களில் நடைபெறும் வாக்குப்பதிவில் மொத்தம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 218 பேர் வாக்களிக்கவுள்ளனர். ஒன்றியங்களிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
    Next Story
    ×