search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீ ஆதிவராகநல்லூர் பகுதியில் தொழிலாளியின் வீட்டின் சுவர் இடிந்த காட்சி.
    X
    ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீ ஆதிவராகநல்லூர் பகுதியில் தொழிலாளியின் வீட்டின் சுவர் இடிந்த காட்சி.

    ஸ்ரீ முஷ்ணத்தில் பலத்த மழை- தொழிலாளி வீடு இடிந்தது

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பெய்த பலத்த மழையால் தொழிலாளி வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
    கடலூர்:

    வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான சாரல் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    கடலூரில் இன்று காலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தது. பின்னர் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

    கடலூர், முதுநகர், நெல்லிக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், மேல்பட்டாபாக்கம், நடூவிரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவில் இருந்து சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று காலை முதல் இருந்து மழை பெய்தது.

    இந்நிலையில் மார்கழி மாதம் பனிக்காலம் என்பதால் குளிர்காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் குளிரால் பாதிப்படைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர், சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை இடி, மின்னல் இல்லாமல் சாரல் மழை பெய்துவருகிறது.

    ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீ ஆதிவராகநல்லூர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. அந்த பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 42) கூலி தொழிலாளி.

    இவரது வீட்டின் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். பெய்த பலத்த மழையால் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் அந்த பகுதி குடியிருப்பில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஸ்ரீ முஷ்ணம் சுற்றுவட்டார பகுதிகளான ராஜேந்திரபட்டினம், சாத்தமங்கலம், ஆனந்தகுடி, கொக்கரன்பேட்டை, புதுகுப்பம், கழியன்குப்பம், கண்டியான்குப்பம், சேத்தான்பட்டு, ஸ்ரீ ஆதிவராகநல்லூர், நகரபாடி, பூணமங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 8 மணியளவில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இன்று காலையும் சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த சாரல் மழையில் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    பெண்ணாடம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இருந்து லேசான சாரல் மழை இன்று காலை வரை விட்டு விட்டு பெய்தது.

    புவனகிரி சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலையில் இருந்து சாரல் மலை பெய்தது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், அனுமந்தை, ஆலத்தூர், குனிமேடு போன்ற சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்னர்.

    Next Story
    ×