என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டர்களுடன் நடனமாடிய அமைச்சர் கே.சி.கருப்பணன்.
    X
    தொண்டர்களுடன் நடனமாடிய அமைச்சர் கே.சி.கருப்பணன்.

    அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடனம் ஆடி ஓட்டு கேட்ட அமைச்சர் கருப்பணன்

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கருப்பணன் நடனம் ஆடி வாக்கு சேகரித்தார்.
    ஈரோடு:

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதேபோல் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சி மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்களும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பட்தூர் ஊராட்சிக்குட்பட்ட கெம்மியன் பட்டியில் நேற்று மாலை தமிழக சுகாதார துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து ஓட்டு கேட்டு கொண்டிருந்தார்.

    அங்கு சிறிய அளவில் போடப்பட்டு உள்ள மேடையில் ஏறி அமைச்சர் கருப்பணன் பிரசாரம் செய்து பேசிக்கொண்டிருந்தார்.

    அவர் பேசி முடித்ததும் மேளதாளங்கள் முழங்கியது.

    இந்த மேளதாளத்தை கேட்டு அதில் மூழ்கிய அமைச்சர் கருப்பணன் மேடையை விட்டு கீழே இறங்கி மேளதாளத்துக்கேற்று ஆடினார்.

    அமைச்சரே கீழே இறங்கி ஆடியதை கண்ட கூடி இருந்த அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் மேளத்துக்கேற்ப ஆடினர்.

    இதனால் தேர்தல் பிரசாரத்தில் பரவசம் ஏற்பட்டது.

    அதன் பிறகு அமைச்சர் கருப்பணன் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு போடுமாறு கேட்டுக்கொண்டார்.
    Next Story
    ×