search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    குன்னத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

    குன்னத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    குன்னத்தூர்:

    குன்னத்தூர் அருகே சுன்டக்காம்பாளையம் ஊராட்சி தாளப்பதி பகுதியை சேர்ந்தவர் விஜய குமார் (வயது 56).

    இவர் ஊராட்சியில் பகுதி நேர வாட்டர் மேனாக பணிபுரிந்து வந்தார். மேலும் சொந்தமாக லேத் ஒர்க்‌ஷாப் வைத்துள்ளார்.

    இவர் வீட்டில் இருந்து கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் மீது மோதிய வாகனம் குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி .வி. கேமரா மூலம் கண்காணித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×